Thursday, August 13, 2015
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சித்திட்டத்தில் தேசிய அரசாங்கம் எனும் தெரிவு மட்டுமே உள்ளது. அவ்வாறாயின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா என்பதை ரணில் தெளிவாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸா நாயக்க ஆகியோர் மூடிமறைத்த வதை முகாம் உண்மைகளை நாம் தொடர்ந்தும் கிளறிக்கொண்டே இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியினர் தேசிய அரசாங்கம் என்ற ஒரு நிலைப்பாட்டில் தான் செயற்பட்டு வருகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சித்திட்டத்தில் தேசிய அரசாங்கம் எனும் தெரிவு மட்டுமே உள்ளது.
அவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா என்பதை ரணில் தெளிவாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பிரிவினைவாத சக்திகளை எவ்வாறு இணைத்துக்கொண்டு நாட்டை முன்னெடுக்கவேண்டும் என்பதை சம்பிக்க ரணவக்க, மாதுலுவாவே சோபித தேரர் ஆகியோர் தெரிவிக்க வேண்டும்.
மேலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் லண்டன் பயணமாகியுள்ளார். சென்று இரண்டே நாட்களில் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். இந்த விஜயம் தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது. இவர்கள் புலம்பெயர் புலிகளுடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினரா என்பதில் சந்தேகம் உள்ளது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று நல்லாட்சி தொடர்பில் பேசுகின்றனர். அவ்வாறு நல்லாட்சியை பேசும் இவர்களின் கடந்த காலம் எவ்வாறு இருந்தது என்பது எமக்கு மட்டுமே தெரியும். வதை முகாம்களில் இளைஞர்களுக்கு நடந்த கொடுமைகள், இளம் பெண்களுக்கு நடந்த அநியாயங்கள் மற்றும் கொலைகள் என்பன இப்போது இருக்கும் இளம் சமுதாயத்துக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் வாழும் பெரியவர்கள், வயதான அனைவருக்கும் உண்மை என்னவென்பது நன்றாகவே தெரியும்.
ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த உண்மைகளை மூடிமறைக்கின்றனர். இவர்கள் இந்த உண்மைகளை மூடிமறைக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்தும் பழைய குப்பைகளை கிளறிக்கொண்டே இருப் போம். இந்த குற்றச்செயல்களின் உண் மையான குற்றவாளியை தண்டிக்க நாம் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம். அதேபோல் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்து குற் றச்சாட்டுக்களையும் எமது அரசாங்கத்தில் காலதாமதமின்றி விசாரித்து முடிவு காணு வோம் என்றார்.
No comments:
Post a Comment