Sunday, July 26, 2015
இலங்கையைச் சேர்ந்த மேலும் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இலங்கையர்கள் சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் ஆறு முதல் எட்டு பேர் வரையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பற்றிய சுய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கலவெல பிரதேசத்திலிருந்து சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த இலங்கையரின் நெருங்கிய நண்பர்களே இவ்வாறு இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர்களைத் தவிர தீவிரவாத கடும்போக்குடைய தரப்புக்களுடன் தொடர்புடைய மேலும் பலர் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக அரச புலானய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். நாட்டின் பிரபல முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரை கொலை செய்யவும் இந்த தரப்புக்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment