Sunday, July 26, 2015

கடந்த காலங்களில் அரசியல் பலம் ஊடாகவே மக்கள் நலன்திட்டங்களை முன்னெடுக்கமுடிந்தது: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா!

Sunday, July 26, 2015
கடந்த காலங்களில் அரசியல் பலம் ஊடாகவே மக்கள் நலன்திட்டங்களை முன்னெடுக்கமுடிந்தது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று சுன்னாகத்தில் இடம்பெற்ற பிரசார நிகழ்வில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றாமையே இதற்கான காரணம் என்று டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்

அதேவேளை,அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரிசனைக்கொண்டிருக்கிறது

இதன்காரணமாகவே அந்தக்கட்சி, தமது தனிச்சின்னத்தில் இங்கு அம்பாறையில் போட்டியிடுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார்.

ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இங்கு வந்து  புலம்புகிறது

ஏன் என்று தேடிப்பார்க்கின்றபோது,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியினை கண்டே அந்த புலம்பல் என்பதை அறிந்துக்கொண்டதாகவும் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டார்.
           

No comments:

Post a Comment