Friday, July 24, 2015

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க ஜன­வரி 8ஆம் திகதி வெற்­றி­பெற உத­விய சக­ல­ருக்கும் இலஞ்சம் : விமல் வீர­வன்ச!

Friday, July 24, 2015
ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அர­சாங்கம் உரு­வா­கினால் நாட்டின் பொரு­ளா­தாரம் பாரிய பாதா­ளத்தில் வீழ்ந்து விடும்.எமது நாட்டின் வளங்­களை தனி­யா­ருக்கு விற்­பனை செய்­வதே ஐக்­கிய தேசிய கட்­சியின் உண்­மை­யான பொரு­ளா­தார கொள்­கை­யாகும் என தேசிய சுதந்­திர முன்ண்­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.
 
மேலும் வெள்ளை வான் கலா­சா­ரத்தை கடந்த காலங்­களில் யார் முன்­னெ­டுத்துச் சென்­றார்கள் என்­பது தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது எனவும் குறிப்பிட்டார்.எதிர்க் கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
வெற்றி பெற்­றதை பாது­காப்போம்" என்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேர்தல் தொனிப்­பொ­ருளின் உண்­மை­யான அர்த்தம் எந்தளவு இலஞ்சம் கொடுத்தாவது வெற்றி பெற்­றதை பாது­காப்­ப­தாகும். அதா­வது ஜன­வரி 8ஆம் திகதி வெற்­றி­பெற உத­விய சக­ல­ருக்கும் இலஞ்சம் கொடுக்கவே தற்­போது நடை­பெ­று­கி­றது.
 
அந்த வகையில் திரு­கோ­ண­ம­லையில் உள்ள எண்ணெய் குதங்­களை இந்­தி­யா­வுக்கு வழங்க இருக்­கின்­றனர். இந்த வரு­டத்­துக்குள் சுய­நிர்­ணய உரி­மையை வழங்­கு­வ­தாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தாக சம்­ம­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார். கிழக்கில் நிர்­வாக மாவட்­ட­மொன்றை தரு­வ­தற்கு ஒப்­பந்­தத்தில் கைசாத்­திட்­டுள்­ள­தாக முஸ்லிம் காங்­கிரஸ் குறிப்­பி­டு­கி­றது. அது­மாத்­தி­ர­மின்றி மக்கள் விடு­தலை முன்­ண­ணிக்கு 8 இலட்சம் ரூபா­வுக்கு ஐ.ரி.என். மற்றும் லக்­ஹன்ட சேவையில் நேரடி ஒளி, ஒலி­ப­ரப்புச் சேவை வழங்­கப்­ப­டு­கி­றது.
 
மேலும் பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தை இந்­தி­யா­வி­லுள்ள பாரத் பெற்றோல் கம்­ப­னிக்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆகியோர் தங்­க­ளது அர­சாங்­கத்தில் பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தை இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­வ­தற்கு பாரிய முயற்சி செய்­தார்கள். ஆனால் அங்­குள்ள ஊழி­யர்கள் அதனை தடுத்து நிறுத்­தி­னார்கள்.
அது­மாத்­தி­ர­மின்றி லங்கா ஹொஸ்­பிட்டல் நிறு­வ­னத்தின் அரச பங்­கு­களை விற்­பனை செய்ய முற்­ப­டு­கின்­றனர். லிட்­ரோகேஸ் கம்­ப­னியை மீண்டும் செல்கேஸ் கம்­ப­னிக்கும் சதோச நிறு­வ­னத்தை காகீல்ஸ் நிறு­வ­னத்­திற்கும் விற்­பனை செய்ய சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­துள்­ளனர்.
 
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் நாட்டின் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்­தலை நிறுத்­தி­யது. விழும் நிலையில் இருந்த பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தை நாங்கள் உறு­திப்­ப­டுத்­தினோம். இவ்­வாறு பாது­காத்த அரச சொத்­துக்­களை இவர்கள் விற்­பனை செய்ய முயற்­சிக்­கின்­றனர்.
 
மேலும் நாட்டின் பாது­காப்பு குறித்து இவர்கள் எவ்­வா­றான நிலைப்­பாட்டில் இருக்­கின்­றார்கள் என்­பது தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது. மிரி­ஹான பொலி­ஸாரால் தன்­னி­யக்க ஆயு­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ வீரர்கள் ஒரே தினத்தில் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இது எவ்­வாறு நடந்­தது.
வெள்ளை வேனின் உண்மை சம்­பவம் வெளிப்­பட்­டதால் அதனை மூடி மறைப்­ப­தற்கு ஜோன் அம­ர­துங்க இன்று வேறு கதைகளை கூறிவருகிறார். யாரை இலக்கு வைத்து இது நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். இதனை சாதாரண விடயமாக பார்க்க வேண்டாம்.
 
எனவே எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் உருவாகினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடுவதுடன் நாட்டின் பொருளாதாரமும் பாரிய பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்றார்.

No comments:

Post a Comment