Friday, July 17, 2015

அமெரிக்காவில் ராணுவ சேவை மையம் அருகே துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி!

Friday, July 17, 2015      
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சத்தநூகாவில் அந்நாட்டு ராணுவம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் 2 மையங்களில் நேற்று, மர்மநபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு, 4 பேர் துடிதுடித்து பலியாகியுள்ளனர்.

முதலில் அங்குள்ள ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் மையத்தில் புகுந்த அந்த ஆசாமி, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான், பின் அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள அமெரிக்க கடற்படை ரிசர்வ் மையத்திற்குச் சென்றும் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அப்பகுதியில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அப்போது ராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த மர்ம நபர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை உள்நாட்டு பயங்கரவாதமாகவே பார்க்க வேண்டும் என்று டென்னசி பிராந்தியத்தின் கிழக்கு பகுதி அட்டர்னி பில் கில்லியன் கூறியுள்ளார். இந்த தாக்குதல் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment