Sunday, July 26, 2015

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை செயலமர்வு, கருத்தரங்கு என்பனவற்றிற்கு தடை!

Sunday, July 26, 2015
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வு, கருத்தரங்கு, மாதிரி வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறுபவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
           

No comments:

Post a Comment