Saturday, July 11, 2015

இலங்கை கடற்படையின்; 20வது புதிய கடற்படை தளபதி நியமனம்!

Saturday, July 11, 2015      
இலங்கை கடற்படையின்; 20வது கடற்படை தளபதியாக ரியர் அட்மிரால் ஆர்.சீ விஜேகுணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வைஸ் அட்மிராலாக பதவி உயர்த்தப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, முன்னாள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ஜயந்த பெரேரா அட்மிரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த பதவி உயர்வுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment