Thursday, January 8, 2015

ஜனாதிபதி மாளிகைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு: தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது!

Thursday, January 08, 2015
இலங்கை::ஜனாதிபதியின் வாழ்விடமான அலரி மாளிகைக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 800 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அலரி மாளிகையை சுற்றி இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
பிரதிப்பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று மாலை தெரிவித்துள்ளார்.
 
வன்முறைகள் இடம்பெறும் என ஊகம் வெளியிடப்பட்ட போதிலும் 2005 மற்றும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களை விடவும் இம்முறை வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்றது.
 
அமைதியை நிலை நாட்டுவதற்கு இராணுவத்தினர் உதவியும் தேவையன்றால் பெற்றுக் கொள்ளப்படும். இராணுவத்தினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment