Sunday, January 11, 2015

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான எந்த பதவிக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட மாட்டார்!

Sunday, January 11, 2015      
இலங்கை::நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான எந்த பதவிக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இதன்படி பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழே இருக்கும்.
அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சரத் பொன்சேகா மீது கொண்டுள்ள நம்பிக்கையீனமே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இராணுவ தரங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பன திருப்பி வழங்கப்படும் என்று கூறப்படுகின்ற போதும், பாதுகாப்பு சம்பந்தமான எந்த பதவியும் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment