Saturday, January 10, 2015

ஐ.நா விசாரணைகளுக்கு மைத்திரி ஒத்துழைக்க வேண்டும்! - ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்த டேவிட் கமரூன்!!

Saturday, January 10, 2015
இலங்கை::இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைப் பாராட்டி அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே இதனை குறிப்பிட்டிருக்கிறார்.
 
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். நான் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த வேளை அந்த நாட்டில் பெரும் சக்தி உள்ளதை உணர்ந்தேன். அவர் அந்த சக்தியை பயன்படுத்தி ஐக்கியப்பட்ட வளமான - ஸ்திரத்தன்மை வாய்ந்த நாட்டை தலைமை தாங்குவதற்கு நான் வாழ்த்துகிறேன். அமைதியான, ஜனநாயகத் தேர்தல் என்பது அதில் தொடர்புபட்டுள்ள அனைத்து இலங்கையர்களினதும் பெருமைக்குரிய விடயம்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மக்களின் முடிவை ஏற்று அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு இணங்கியமையையும் நான் வரவேற்கிறேன். இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும்   மனித உரிமைகள் மீறல் குறித்து ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸில் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு புதிய ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் கடந்த கால விவகாரங்களுக்கு தீர்வை கண்ட பின்னர் நாடு முன்னோக்கி நகரலாம் - எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment