Friday, December 19, 2014
இலங்கை::மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதும் நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்குமாகாணங்களை மீண்டும் இணைப்பதில்லை என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் தெளிவான கொள்கையாகும். ஆனால் இந்த விடயங்களில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேள்வியெழுப்பினார்.
இலங்கை::மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதும் நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்குமாகாணங்களை மீண்டும் இணைப்பதில்லை என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் தெளிவான கொள்கையாகும். ஆனால் இந்த விடயங்களில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேள்வியெழுப்பினார்.
ஆனால் இந்த விடயங்களில் எதிரணி பொது
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
கேள்வியெழுப்பினார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கை
ஒன்றுக்கு இணங்கியுள்ளார். அந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள்
என்ன? அதில் எட்டப்பட்ட உடன்பாடுகள் என்னவென்று நாட்டுக்கு
கூறவேண்டும். இந்த விடயங்களை நாட்டு மக்களுக்கு கூறாமல் வாக்குகளை
கேட்பது எந்தவகையில் நியாயம்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்
சட்டம் தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின்
நிலைப்பாடு என்ன? என்றும் அவர் வினவினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர்
மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு
மேலும் குறிப்பிடுகையில்,
உலகின் சில நாடுகளில் கடந்த சில
தினங்களாக இடம்பெற்ற நிகழ்வுகளை பார்க்கும்போது இலங்கையின்
அரசியல் ஸ்திரத்தன்மை எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது
யாவருக்கும் புரிந்திருக்கும். இவ்வாறான அரசியல் ஸ்திரம் கொண்ட நாடு
எங்கும் இல்லை. அதனை நாம் அனுபவிக்கின்றோம். பொருளாதார
அபிவிருத்திக்கு இது மிகப்பெரிய விடயமாகும்.
மாற்றுத்திட்டம் என்ன?
மேலும் நாட்டை முன்கொண்டு
செல்வதற்கு அரசியல் ஸ்திரம் என்பது மிகவும் முக்கியமாகும். ஆனால்
எதிரணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளரின்
மாற்றுத்திட்டங்கள் என்னவென்பது யாருக்கும் தெளிவில்லாமல்
உள்ளது. அதாவது தமது நிலைப்பாடுகள் கொள்கைள் குறித்து நாட்டு
மக்களுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதனையும் கூறாமல்
இருக்கின்றார்.
13 குறித்த நிலைப்பாடு
குறிப்பாக பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய
உடன்படிக்கை ஒன்றுககு இணங்கியுள்ளார். அந்த உடன்படிக்கையில் உள்ள
விடயங்கள் என்ன? அதில் எட்டப்பட்ட உடன்பாடுகள் என்னவென்று
நாட்டுக்கு கூறவேண்டும். இந்த விடயங்களை நாட்டு மக்களுக்கு கூறாமல்
வாக்குகளை கேட்பது எந்தவகையில் நியாயம்? அரசியலமைப்பின் 13 ஆவது
திருத்தச் சட்டம் தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவின் நிலைப்பாடு என்ன?
பொலிஸ் அதிகாரம்
மாகாண சபைகளுக்கு கோரப்படும் பொலிஸ்
அதிகாரங்கள் குறித்து பொது வேட்பாளரின் நிலைப்பாடு என்ன? பொலிஸ்
அதிகாரங்களை வழங்க அவர் தயாரா? வடக்கு கிழக்கை இணைக்கவேண்டும் என்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது. இந்த வி்டயத்தில் பொது
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன? இவற்றைக்
கூறாமல் மக்களிடம் வாக்குகளை கோர முடியுமா? "
நாட்டுக்கு எதிராக செயற்படும் வடக்கு மாகாண சபை
வடக்கு மாகாண சபையானது நாட்டுக்கு
எதிராக துரோகமிழைககும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது.
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவா சென்று விசாரணைக்
குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு கோரியிருந்தார். இவ்வாறான
செயற்பாடுகளில் பொது வேட்பாளர் எவ்வாறு பார்க்கின்றார்? மேலும் வட
மாகாண சபையின் ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்கின்றார்.
ஆளுநருக்கு என்ன நடக்கும்?
இந்நிலையில் பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன நிறைவேறறு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை
நீக்கிவிட்டால் ஆளுநருக்கு என்ன நடககும்? வடக்கு மாகாண சபைக்கு என்ன
நடக்கும்? நாட்டின் நிலை என்ன? இந்த விடயங்கள் குறித்து பொது
வேட்பாளரின் நிலைப்பாடு என்ன? எதிரணியில் உள்ளவர்கள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கவேண்டும் என்ற குறுகிய கால
நோக்கத்துடன் இணைந்துள்ளனர்.
இரு துருவங்கள்
பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேன ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஆகியவற்றுடன் எவ்வாறு உடன்படிக்கை செய்ய முடியும்? இரண்டு
கட்சிகளும் இரண்டு துருவங்கள். வானத்தையும் பூமியையும் போன்ற
கட்சிகள். கறுப்பு வௌ்ளை போன்ற கட்சிகள். இந்தக் கட்சிகளுடன்
எவ்வாறான இணக்கப்பாட்டை மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேன
ஆட்சியமைப்பார்? இந்தக் கூட்டணி குழம்பிய குட்டையாகவே
காணப்படுகின்றது. பரஸ்பரம் விரோதமான கருத்துக்களை கொண்டுள்ளது.
இது நாட்டை அழிக்கும் சக்திகளுககு பாரிய நன்மையாக
அமையப்போகின்றது.
புலிகளின் ஈழக்கனவு தொடர்கிறது
புலிகளின் ஈழம் கனவு இன்னும்
கைவிடப்படவில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறியுள்ளது. பொது
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுவது போன்று 100 நாட்களில்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க முடியாது.
ஜனாதிபதி பதவிக்கு வருகின்றவர் அந்தப் பதவியை ரத்துச் செய்ய
முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அந்த அதிகாரம்
பாராளுமன்றத்துக்கே உள்ளது. இதனை செய்வதற்கு மைத்திரிபாலவுக்கு
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லை. மேலும்
சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். பாராளுமன்றத்தை
கலைத்தால் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது.
சிறிசேனவின் முகத்தைக்காட்டி ரணில்
இது வித்தியாசமான முயற்சியாக
தெரிகின்றது. அதாவது மைத்திரிபால சிறிசேனவின் முகத்தைக் காட்டி
ரணில் விக்ரமசிங்க அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றார்.
மறைமுகமாக இதனை செய்யபார்க்கின்றனர். மாற்றம் என்பது இறுதி
நோக்கம் அல்ல. ஆசிய மக்கள் வெறுமனே தற்காலிக மாற்றங்களை
விரும்புகின்ற மக்கள் அல்ல. ஜனாதிபதி நான்கு வருடங்களில்
தேர்தலுக்கு சென்றுள்ளதைப் போன்று ஜப்பான் பிரதமரும் கால எல்லை
முடியும் முன்னர் தேர்தலுக்கு சென்றார். பெரும்பான்மை ஆட்சியை
கைப்பற்றியுள்ளார். மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் நாட்டை
அபிவிருத்தியையும் முன்னெடுத்தால் எத்தனைவருடங்கள்
வேண்டுமானாலும் கட்சிகள் ஆட்சியில் இருக்கலாம். ஜனவரி எட்டாம்
திகதி நள்ளிரவு 12 மணிக்கு விமான நிலைய கதவுகளை மூடுவதாக
கூறுகின்றனர். எனவே இது தீர்க்கமான தேர்தல். மக்கள் சிந்தித்து
முடிவெடுக்கவேண்டும்.
சதி உள்ளது
கேள்வி: சர்வதேச சதி என்பது பழைய விடயமல்லவா?
பதில்: அவ்வாறு கூற முடியாது. சுரேன்
சுரேந்திரன் என்ற புலி உறுப்பினர்கள் ஜனாதிபதி தோற்றதும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுபோவதாக
கூறியுள்ளார். இதன் மூலம் என்ன தெரிகின்றது?
கேள்வி: ஜனாதிபதியை அவ்வாறு கொண்டுசெல்ல விடமாட்டோம் என்று மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளாரே?
பதில்: அது யதார்த்தமாகாது. அந்த தீர்ப்பை மக்கள் வழங்கவேண்டும்.
கேள்வி: மாகாண சபைகளுக்கு பொலிஸ்
அதிகாரங்கள் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் குறித்து பொது
வேட்பாளரின் நிலைப்பாடு என்னவென்று கேட்கின்றீர்கள்?
அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: மாகாண சபைகளுக்கு பொலிஸ்
அதிகாரங்களை வழங்குவதில்லை என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான
அரசாங்கத்தின் தெளிவான கொள்கையாகும். எமது இந்த நிலைப்பாட்டை
இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் கூறிவிட்டோம். இது தெளிவான
நிலைப்பாடாகும். ஆனால் இந்த விடயங்களில் எதிரணி பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்பதனை கூறவேண்டும்.
வடக்கு கிழக்கு
அது வடக்கு கிழக்கு மாகாணங்கள்
நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டன. அவ்வாறு நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதில்லை என்பது எமது திட்டவட்டமான
கொள்கையாகவுள்ளது. அது மட்டுமன்றி பிரிக்கபபட்ட மாகாண சபைகளில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டுள்ளது.
No comments:
Post a Comment