Tuesday, December 2, 2014

முஸ்­லிம்­க­ளுக்கு நூறு வீத பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எப்­போதும் தயா­ரா­கவே உள்­ளது: பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்ஷ!

Tuesday, December 02, 2014
இலங்கை::ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களை தூர­மாக்கி அதன் மூலம் இலாபம் பெறு­வ­தற்கு சில தீய­சக்­திகள் திரைக்கு பின்­னா­லி­ருந்து சதித்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. இவர்­க­ளது சதித்­திட்­டங்­க­ளுக்கு பலி­யா­காது முஸ்­லிம்கள் நிதா­ன­மாக நடந்து கொள்ள வேண்டும். இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு நூறு வீத பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எப்­போதும் தயா­ரா­கவே உள்­ளது என பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.
 

பேரு­வளை சீனன்­கோட்­டையில் இடம்­பெற்ற களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்­க­ளு­ட­னான விசேட கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.பாது­காப்புச் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்ஷ இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
முஸ்லிம் சமூ­கத்­திற்கு பிரச்­சி­னைகள் எழும்­போது உலமா சபை­யுடன் அடிக்­கடி கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். உலமா சபையும் அடிக்­கடி இந்­நாட்டு முஸ்­லிம்­களின் பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள் தொடர்­பாக என்­னுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது.

அளுத்­கமை சம்­ப­வத்தில் சேத­முற்ற பள்­ளி­வாசல், வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் கூடிய விரைவில் மீள்­பு­ன­ர­மைக்­கப்­பட்­டன. இவ்­வா­றான நிலையில் பொய்ப் பிர­சா­ரங்­களைச் செய்து முஸ்­லிம்­களை திசை­தி­ருப்ப முனை­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

இதற்கு முன்­பி­ருந்த அர­சாங்­கங்­களின் காலத்­திலும் இன வன்­மு­றைகள் ஏற்­பட்­டதை எவரும் மறந்­தி­ருக்­க­மாட்­டார்கள். அக்­கா­லத்தில் நாம் செய்­த­தைப்­போன்று மீள்­பு­னர­மைப்புப் பணிகள் விரை­வாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. சிறு சிறு பிணக்­குகள் ஏற்­படும் போது சிவில் சமூகம், மத தலை­வர்கள் சேர்ந்து கலந்­து­ரை­யாடி நல்ல தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு முன்­வர வேண்டும். பிரச்­சி­னைகள் பூதா­க­ர­மா­வ­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது.

இலங்­கைக்கு எதி­ராக ஜெனீ­வாவில் தீர்­மானம் கொண்­டு­வந்த போது அரபு நாடுகள் இலங்­கைக்கு சார்­பாக இருந்­ததை எம்மால் மறுக்க முடி­யாது. ஜெனீவா தீர்­மா­னத்­திற்கு எதி­ராக இந்­நாட்டு முஸ்­லிம்கள் ஒன்றுதிரண்டு அமெ­ரிக்க தூத­ர­கத்­திற்கு முன்­பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டமொன்றை நடத்­தி­யதை இங்கு நினை­வு­ப­டுத்­து­கிறேன்.

அந்த ஆர்ப்­பாட்­டத்தின் பின்­னர்தான் ஜனா­தி­ப­திக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான நெருங்­கிய தொடர்பை தூர­மாக்­கு­வ­தற்கு சில தீய சக்­திகள் கங்­க­ணங்­கட்டி செயல்­படத் தொடங்­கின. பொய்­யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டனர். இவ்­வா­றான போலி­யான பிர­சா­ரங்­களின் மூலம் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை தம் பக்­கத்­திற்கு இழுத்துக் கொள்­வ­தற்கு சில சக்­திகள் செயல்­பட்டு வரு­கின்­றன.

கொழும்­பி­லுள்ள முஸ்­லிம்­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தாக பொய்­யான பிர­சா­ரங்­க­ளையும் மேற்­கொள்­கின்­றனர். கொழும்­பி­லுள்ள சேரி வாழ் குடி­சை­களை அகற்றி மாடி வீட­மைப்புத் திட்­டங்­களை உரு­வாக்கி தலை­ந­கரை அழ­கு­ப­டுத்தி வரு­கின்றோம். ஓலைக் குடி­சை­களை அகற்றி இது­வரை 5000க்கும் அதி­க­மான வீடு­களை அமைத்­துள்ளோம். அமைக்­கப்­பட்ட 5000 வீடு­களில் கூடு­த­லான வீடுகள் முஸ்­லிம்­க­ளுக்கே வழங்­கப்­பட்­டன.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இந்­நாட்டு முஸ்­லிம்­களின் முழு­மை­யான ஆத­ரவு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு கிடைக்கும் என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. முஸ்­லிம்கள் என்றும் இந்­நாட்­டுக்கு விசு­வா­ச­மாக செயற்­ப­டு­கின்­றனர். ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தேகம் கொண்டு பார்க்கக் கூடாது. அதன் மூலம் தப்­பான அபிப்­பி­ரா­யமே ஏற்­ப­டு­கி­றது எனவும் பாது­காப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, அமைச்சர்களான ரெஜினோல்ட் குரே, ரோஹித அபேகுணவர்தன, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மேல் மாகாண சபை உறுப்பினர்களான பியல் நிசாந்த. பிரசன்ன சஞ்ஜீவ, பேருவளை நகர பிதா மில்பர் கபூர், முன்னாள் நகரபிதா மர்ஜான் பளீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment