Sunday, December 07, 2014
இலங்கை::புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் மீட்பு.
புலிகளால் முல்லைத்தீவு - வெல்லமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் பெரல்கள் ஒன்பது இராணுவத்தினரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.
வெல்லமுள்ளி வாய்க்கால் கடற்கரைப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் இதனை மீட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது, கடற் புலிகளினால் தங்களது படகுகளுக்கு பயன்படுத்த
இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment