Sunday, December 07, 2014
சிங்கப்பூர்::இந்த பறக்கும்
சர்வர் ரோபோக்கள் ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை கவருவதுடன்,
சிங்கப்பூரில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாட்டையும் போக்க உதவும் என்று
உரிமையாளர் கூறுகிறார்.
சிங்கப்பூரில் உள்ள ‘டிம்ப்ரே குரூப்’
ஓட்டல்கள் உலகிலேயே முதலாவதாக ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. அது
அந்த குழுமத்தில் உள்ள 5 ஓட்டல்களில் சர்வர்களாக ஆட்கள் யாரும் இருக்க
மாட்டார்கள். ஆனால் உங்கள் உணவுகளை பறக்கும் ரோபோக்கள் சுமந்து கொண்டு
உங்கள் மேஜைக்கு பறந்து வந்து வழங்கும். இதற்காக அந்த ஓட்டல் நிறுவனம்
இன்பினியம் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு நிறைவடையும்.
No comments:
Post a Comment