Saturday, December 20, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அட்டாளைச்சேனை தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை மருதையடி பிரதான வீதியில் இடம் பெற்றது.
தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இ;க்காரியாலயத்தினை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் கல்முனை மேயருமான சிராஸ்; மீராசாஹிபு, தொழிலதிபர் எஸ்.எல்.மக்கீன், அல் - அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்ஸார் உட்பட தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment