Saturday, December 6, 2014

ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தார்!

Saturday, December 06, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய  கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ளார்.
 
ஐக்கிய தேசிய  கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
 
ரணில் விக்ரமசிங்கவை கடந்த காலங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச கிடைத்த போதிலும் தேர்தல் காலங்களில் அவரை சந்திக்க முடியாது. அவர் ஏதாவது பொய் ஒன்றை கூறி சந்திப்பை தவிர்த்து விடுவார்.
 
ஐக்கிய தேசிய  கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரட்ணம் சசிதரன் அண்மையில் ஒருநாள் கொழும்புக்கு வந்து, ஐக்கிய தேசிய  கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்த போதும் ரணிலை சந்திக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் ஜெகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment