Saturday, December 6, 2014

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை!

Saturday, December 06, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
நான்கு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் சார்பிலேயே சந்திரிக்கா இவ்வாறு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் சந்திரிக்கா பத்துக்கு மேற்பட்ட ராஜதந்திரிகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொது வேட்பாளரின் வெளிவிவகார உறவுகள் தொடர்பிலான பொறுப்பு சந்திரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment