Friday, December 19, 2014
நாகை::நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் வேலைநிறுத்தம் 9-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
இலங்கை சிறையிலுள்ள 81 மீனவர்களையும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 87 விசைப்படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தி மீனவர்கள் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கடற்பரப்பில் அச்சமின்றி மீன்பிடிக்கவும், ஆழ்கடல் மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்களுக்குத் தேவையான உபகரணங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை அந்நியச் செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி சார்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment