Monday, November 17, 2014

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வாயைக் கத்தியால் கிழிப்பேன்: ரோஹித அபேகுவர்த்தன எச்சரிக்கை!

Monday, November 17, 2014
இலங்கை::எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வாயைக் கத்தியால் கிழித்துக் காயப்படுத்தப் போவதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
நேற்று களுத்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய,அமைச்சர் அபேகுணவர்த்தன, ஜனாதிபதியைத் துரோகி என்று வர்ணித்துள்ள ரணில் விக்கிரமசிங்க என் கையில் கிடைத்தால் இனி அவர் பேசவே முடியாதபடி வாயின் இரண்டு பக்கமும் கத்தியால் கிழித்து ஊனப்படுத்தி விடுவேன், இல்லாவிட்டால் அவரது முகத்தை மண்ணில் தேய்த்து சிதைத்து விடுவேன்.
 
ஜனாதிபதிக்கு நாங்கள் மனப்பூர்வமாக அன்பு செலுத்துகின்றோம். அவரை திட்டுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment