Monday, November 17, 2014

இலங்கை - ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!


Monday, November 17, 2014
இலங்கை::இ
லங்கை - ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
 
தீவிரவாதம் மற்றும் தேசவிரோத அமைப்புக்களின் குற்றங்களுக்கு எதிராக செயற்படல், நீர் மற்றும் சுகாதாரம், மீள்புதிப்பிக்கத்தக்க சக்தி, விவசாய மற்றும் சுற்றாடல் கொள்கை, வளமான உல்லாசப்பிரயாணத்துறை கைத்தொழில்,
 
கல்வி மற்றும் கலை பரிமாற்றம், நிறுவன நிர்மாணம், ஒத்துழைப்பு மற்றும் ஐநா கட்டமைப்புக்குள் அந்நியோன்ய ஒத்துழைப்பு உட்பட பல விடயங்கள் இவ்வொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment