Wednesday, November 19, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு முப்படையினர் ஏற்பாடு செய்த அன்னதானம் வழங்கும் வைபவம்!

Wednesday, November 19, 2014
இலங்கை::
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு முப்படையினர் ஏற்பாடு செய்த அன்னதானம் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் உள்ள மிதக்கும் சந்தையில் இடம்பெற்றது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில், 20ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர்.

இராணுவப்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் ஜயந்த பெரேரா, விமானப்படை தளபதி ஏயார் மார்சல் கோலித குணதிலக ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment