Thursday, November 20, 2014

மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஐந்து இந்­திய மீன­வர்­களை விடு­தலை செய்­தமை தொடர்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ ­வுக்கு நன்றி: இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம்!

Thursday, November 20, 2014
இலங்கை::மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஐந்து இந்­திய மீன­வர்­களை விடு­தலை செய்­தமை தொடர்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ ­வுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக இந்­தியா தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.
 
மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஐந்து இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர் என்­ப­தனை இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யகம் உறு­தி­ப்ப­டுத்­து­கின்­றது. இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் மனி­தா­பி­மான செயற்­பாட்­டுக்­காக நன்றி தெரி­விக்­கின்றோம். இது இரண்டு நாடு­க­ளி­னதும் நட்­பு­றவை மேலும் பலப்­ப­டுத்தும்
 
. கடந்த ஒன்­பதாம் திகதி ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியும் தொலை­பே­சியில் உரை­யா­டி­ய­மையை இங்கு நினை­வூட்­டு­கின்றேன். குறித்த மீன­வர்­களை இந்­திய உயர்ஸ்தானிகர் சந்தித்து பேசினார். அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment