Monday, November 24, 2014

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் இலகு வெற்றியீட்டும்: தினேஸ் குணவர்தன!

Monday, November 24, 2014
இலங்கை::
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் இலகு வெற்றியீட்டும் என நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு பாரிய வாக்கு வித்தியாசத்தினால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்.
 
இன்று நடைபெறவுள்ள மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை தோற்கடிக்க சதிகாரர்கள் முயற்சிக்கின்றனர். எனினும், இந்த சதி முயற்சி வெற்றியளிக்காது.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாக்கெடுப்பில் மட்டுமன்றி, ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் போன்ற அனைத்திலும் ஆளும் கட்சி இலகு வெற்றியீட்டும்.
 
அதிகார ஆசை கொண்ட அரசியல்வாதிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன எடுத்தத் தீர்மானம் சிறுபிள்ளைத் தனமானது என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
மத்துகம பிரதேசத்தில் நீர் விநியோகத் திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment