Sunday, November 30, 2014

தூக்கி எறியப்படுவதற்கு முன் வெளியேறுங்கள் – வைகோவிற்கு சுப்ரமணிய சாமி எச்சரிக்கை!

Sunday, November 30, 2014
சென்னை:கூட்டணியை விட்டு வெளியேறுமாறு வைகோவிற்கு சுப்ரமணிய சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து சுப்ரமணிய சாமி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூட்டணியை விட்டு நீங்கள் தூக்கியெறியப்படுவதற்கு முன் நீங்களாகவே வெளியேறிவிடுங்கள் என்றும், இதற்கு மேல் இதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
வைகோ பல சமயங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வந்தாலும் இன்னும் கூட்டணியை விட்டு வெளியேறாதது, அவரது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் சுப்ரமணிய சாமி வைகோவை இது போன்று பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment