Sunday, November 30, 2014

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாய் நாட்டைக் கட்டிக் காத்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், நாட்டையும் கட்சியையும் காட்டிக் கொடுத்தவருக்குமிடையே போட்டி!

Sunday, November 30, 2014
இலங்கைஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாய் நாட்டைக் கட்டிக் காத்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், நாட்டையும் கட்சியையும் காட்டிக் கொடுத்தவருக்குமிடையே போட்டி இடம்பெறவுள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர்.

நாட்டில் நிலவிய கொடிய பயங்கரவாதத்தை இல்லா தொழித்து தமிழ் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களையும் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வைத்து நாட்டை என்றுமில்லாதவாறு அபிவிருத்தி செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தடவையும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

 
இவரை எதிர்த்து ஜனாதிபதியுடன் முதல்நாள் இரவுகூட ஒன்றாக அமர்ந்திருந்து அப்பமும், கட்டுச்சம்பலும் சாப்பிட்டுவிட்டு அடுத்தநாள் அதே ஜனாதிபதியை அவதூறாக விமர்சித்து கட்சிக்கும் நம்பிக்கை வைத்திருந்த கட்சித் தலைவரான ஜனாதிபதிக்கும் துரோகமிழைத்துவிட்டுச் சென்ற மைத்திரிபால சிரிசேன போட்டியிடவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகன இவரை ஜனாதிபதி தனது மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக வைத்திருந்தார். தனது உடன் பிறப்பு போன்ற உயரிய அந்தஸ்தை ஜனாதிபதி வழங்கியும் இருந்தார். ஆனால் இவரோ உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்துவிட்டார்.

உண்மையில் இது பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தது போன்று இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இரவு வரை அவருடன் இருந்து சாப்பிட்டு விட்டு வெறும் முப்பது வெள்ளிக் காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தது போலவும், நபி பெருமானாரைக் காட்டிக்கொடுக்க முயற்சித்த அபு ஜஹீல் போலவுமே உள்ளது.

ஆனால் கூட இருந்தே குழிபறிக்க முனைந்த துரோகிகளான இவர்கள் எல்லாம் இந்த மதத் தலைவர்களைக் காட்டிக்கொடுத்த போதும் அவர்கள் சார்ந்த மார்க்கம் கோடான கோடி மக்களுடன் ஆலவிருட்சமாக வளர்ந்து இன்று உலகம் பூராவும் வியாபித்துள்ளதை நாம் காண்கிறோம். அதேபோன்று ஜனாதிபதி அவர்களும் முன்னரை விடவும் மக்கள் போற்றும் தலைவராக இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நிச்சயம் பெருவெற்றி பெறுவார்.

பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தது போன்று காட்டிக் கொடுத்தவர்கள் அழிந்தமையே வரலாறு. வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கெதிராக சதி செய்தவர்கள் தொடர்பான விபரம் அனைத்தும் அம்பலத்துக்கு விரைவில் வெளிச்சத்திற்கு வரும். பாரிய கற்பாறையை அசைத்தாலும் மெதமுலனவில் வீற்றிருக்கும் ஜனாதிபதியை அசைக்க முடியாது. அவருடன் முழு நாட்டு மக்களும் உள்ளனர் என அஸ்வர் தெரிவித்துள்ள கருத்தானது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதொன்று.

ஏனெனில் நாட்டு மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. அதனால் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதமான சிறு தாக்கம் கூட ஏற்படாது. மக்கள் அவருக்குப் பக்க பலமாக உள்ளனர். சர்வதேச சதிகாரர்களின் பணபலத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள துரோகச் செயலில் ஈடுபட்ட எவரையும் மக்கள் இலகுவில் மன்னிக்கமாட்டார்கள். அவர்களுக்கு உரிய நேரத்தில் மக்கள் தங்கள் வாக்குப்பலத்தின் மூலம் தக்கதண்டனையை பெற்றுக் கொடுப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட்டு இம்முறையும் தோல்வியைத் தழுவினால் தற்போது தான் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோய்விடும் என்பதை நன்கு அறிந்திருந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஒரு பலிக்கடாவை தேடிக் கொண்டி ருந்தார். அவருக்கு அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு தாவிய மைத்திரி பால சிறிசேன ஒரு சிறந்த பலிக்கடாவாக அமைந்திருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேனவினாலும் வேறு எந்த அரசியல் வாதியினாலும் 2005ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டுக்கு சேவை செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்க டிப்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஒரு தேசத்தலைவராக மட்டுமன்றி, மக்களின் ஏகோபித்த தலைவராகவும் இன்று உயர்ந்து, பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஆதரவு வழங்க கட்சிகளும், அரசியல் தலைவர்களும், பொது மக்களும் முண்டியடிக்கின்றனர். பொது வேட்பாளர் மைத்திரிபால தான் முப்பது வருடங்களாக இருந்த கட்சியையே காட்டிக் கொடுத்துள்ளார். ஒரு பதவிக்காக கட்சியைக் காட்டிக் கொடுத்தவர் நாளை நாட்டையே சூறையாட ஒற்றைக் காலில் நிற்கும் வெளிநாட்டுச் சக்திகளிடம் அடிபணிய மாட்டார் என்பது என்ன நிச்சயம்? என்ன உத்தரவாதம்? பதவி கிடைப்பதற்காக தனது தலைவரையும், கட்சியையும் காட்டிக் கொடுத்து கட்சி தாவியவர் நாளை நாட்டை சரியாக நிர்வகிப்பார் என எப்படி கூற முடியும்?

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டுப்பற்று மிக்கவராகக் காணப்படுகிறார். தாய் நாட்டிற்காக சதி முயற்சிகளில் ஈடுபட முயலும் மேற்குலக நாடுகளுடன் போரிட்டு வருகிறார். 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ “ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறாது இருந்திருந்தால், இன்று நாடு வெளிநாட்டு தீய சக்திகளினால் ஆக்கிரமிக் கப்பட்டு புலிகளுக்கு நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்திருக்கக் கூடிய அராஜக நிலை இங்கு தோன்றியிருக்கும். நாட்டு மக்களின் சுதந் திரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகுவதை எவராலும் தடுத்து நிறுத்திருக்க முடியாது இருந்திருக்கும்.

2005இல் ஆரம்பித்த அவரது தேசப்பற்றினால் வெளிநாடுகளில் அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி புலிகளுடனான யுத்தத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் மேற்கொண்டு பயங்கரவாதத்தை 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று அடிபணிய வைத்தார். இதன்மூலம் மக்களை விடுவித்து அவர்களது நல்வாழ்வுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இத்தகைய தாய் நாட்டுப் பற்றுள்ள ஜனாதிபதியை நாட்டு மக்கள் இலகுவில் கைவிட்டுவிட மாட்டார்கள். அதேசமயம் நாட்டைக் காட்டிக் கொடுக்க முயல்வோரையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

No comments:

Post a Comment