Friday, October 17, 2014

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் சந்திப்பு!

Gothabaya_Rajapaksa_1.jpg

Friday, October 17, 2014
இலங்கை::பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
 
எதிர்வரும் வாரத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ புது டெல்லி விஜயம் செய்ய உள்ளார்.
 
கோதபாயவின் புது டெல்லி விஜயத்தை உறுதிப்படுத்திய தகவல்கள், என்ன காரணத்திற்காக இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார் என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.
 
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை கோதபாய ராஜபக்ஸ சந்திக்க உள்ளார்.
 
பாதுகாப்புச் செயலாளர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது குறித்து எதுவும் தெரியாது என இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஜயம் பற்றி தெரியாது எனவும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெறும் வழமையான சந்திப்பாக இருக்கக் கூடும் எனவும் இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் கோதபாய இந்திய விஜயங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment