Saturday, October 18, 2014

ஜெயலலிதா விடுதலை: அதிமுகவினர் கொண்டாட்டம்!

Saturday, October 18, 2014
மதுரை::அதிமுக பொதுச் செயலாளர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதையொட்டி நேற்று மதுரையில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
 
மக்களின் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு டெல்லி சுப்ரீம் கோர்ட் நேற்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இது பற்றிய தகவல் நேற்று தமிழகம் முழுவதும் பரவியது. இதனை அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள். மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவினர் பனகல் சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நேற்று பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். மேலும் மதுரையின் முக்கிய பகுதிகளான பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், தெற்குவாசல், ஆரப்பாளையம், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்து கோலாகலமாக கொண்டாடினர்.
 
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அதிமுக அவை தலைவர் புதூர் துரைபாண்டியன், துணை செயலாளர் சி. தங்கம், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ஜெ. ராஜா, துணை மேயர் கு. திரவியம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மண்டல தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ஜெயவேல், கே. ராஜபாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் வி.கே.எஸ். மாரிச்சாமி, தளபதி ஆர். மாரியப்பன், செ. ஜெயபால், ஏ.கே. முத்து இருளாண்டி, பூமிபாலகன், கவுன்சிலர்கள் கேசவ பாண்டியம்மாள், சுகந்தி அசோக், கலாவதி, கார்னர் பாஸ்கரன், அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகள் ரம்யா, மருமகன் கணேஷ்பிரபு, டால்பின்அசோக், பாசறை செயலாளர் டி.வினோத்குமார், வட்ட பேரவை செயலாளர் எஸ்.வி.டி. ரவி, பீபிகுளம் ராமசந்திரன், வட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பி. முத்துச்சாமி, வைகை மூர்த்தி, எம்.ஜி. பாண்டியன், கிருபாகரன், பாவலர் ராமசந்திரன், வெடி சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
மதுரை மத்திய தொகுதி கழக அதிமுக சார்பில் தொகுதி கழக செயலாளர் கிரம்மர் சுரேஷ் தலைமையில் மதுரை கோட்ஸ் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 70வது வட்ட அதிமுக சார்பில் காமராஜர்புரம் பகுதியில் வட்ட கழக செயலாளர் ஆர். போஸ், பகுதி கழக துணை செயலாளர் கே. ராமநாதன், சொசைட்டி தலைவர் சண்முகசுந்தரம், பகுதி இளைஞரணி தலைவர் பி. ராமமூர்த்தி, சந்தானம், ஆர். ருக்மணி, பாண்டி உள்ளிட்ட அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள். மேலும் மதுரை நகரில் உள்ள 100 வார்டுகளிலும் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
 
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள். இதில் கிழக்கு ஒன்றிய சேர்மன் பாண்டீஸ்வரி, ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே. முருகேசன், மாவட்ட கவுன்சிலர் கள்ளந்திரி பி. சேகர், ஒன்றிய துணை சேர்மன் கலைவாணி, கார்த்திகேயன், உத்தங்குடி மகேஷ், ரவி, சிவா உள்ளி்ட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment