Saturday, October 18, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக அமைச்சர் விமல் வீரவன்ச: நிபந்தனையற்ற ஆதரவு!

Saturday, October 18, 2014
இலங்கை::நடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளது.
 
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் குழுவொன்று நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளாது இதன்போதே இந்த உறுதிமொழியை அக்கட்சியினர் வழங்கியுள்ளனர்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக தேசிய சுதந்திர முன்னணி அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆலோசனை மற்றும் கருத்துக்களை கவனத்திற் கொண்டே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment