Thursday, October 02, 2014
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் 12ம் திகதி வடக்கிற்குப் பயணம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்வரும் 12, 13, 14 ஆகிய நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கிற்கு பயணம் செய்யவுள்ளனர். இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்து கொள்ளுமா எனக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வடபகுதிப் பயணத்தின் போது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதேபோல் இம்மாகாணத்தின் மீளாய்வு தொடர்பான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் வடபகுதிப் பயணத்தின் போது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதேபோல் இம்மாகாணத்தின் மீளாய்வு தொடர்பான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கு இன்னமும் அழைப்புக் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான சூழலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் வடமாகாண முதலமைச்சரின் ஊடாக தெரியப்படுத்தப்படும் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment