Thursday, October 2, 2014

சர்வதேச மன்னிப்பு சபையினால் இலங்கை தொடர்பில் மீண்டும் அறிக்கை!

Thursday, October 02, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில், இலங்கை தொடர்பான புதிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

40 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், இலங்கையின் மனித உரிமைகள் உள்ளிட்ட நிலைமைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை அடுத்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment