Thursday, October 2, 2014

இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 45 கிலோ தங்கம் நேற்றிரவு மாதகல் கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது!

Thursday, October 02, 2014
இலங்கை::இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 45 கிலோ தங்கம் நேற்றிரவு மாதகல் கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
மாதகல் பிரதேசத்திலிருந்து சந்தேக நபர்கள் இருவர், படகு ஒன்றில், இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை நேற்றிரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களிடம் இருந்து 45 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது எனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
 
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவர்கள் பயணித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment