Tuesday, September 30, 2014

லெனின் சிலையை தகர்த்த உக்ரைன் மக்கள்!!

Tuesday, September 30, 2014
கிவ்::உடைந்த சோவியத் ரஷியாவில் இருந்து உக்ரைன் நாடு உருவானது. இங்கு கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக உள்ள ரஷியா ஆதரவாளர்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வருகின்றனர். அது உள்நாட்டு போர் ஆக உருவெடுத்தது.

போராட்டக்காரர்களுக்கு ரஷியா ஆதரவளித்தது. அவர்களுக்கு ஆயுத உதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் உக்ரைன் மக்கள் ரஷியா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். தங்கள் எதிரியாக கருதுகின்றனர்.

எனவே உக்ரைன் அரசு ஆதரவாளர்கள் ரஷியாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கார்சிவ் நகரில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அங்கு நகரின் மையத்தில் இருந்த மிக உயரமான பிரமாண்ட லெனின் சிலையை அகற்றினர். முன்னதாக லெனின் சிலையின் கால் பகுதியை கியாஸ் வெட்டிங் மூலம் அறுத்தனர். பிறகு கயிறு கட்டி அச்சிலையை கீழே தள்ளி தகர்த்தனர்.

No comments:

Post a Comment