Tuesday, September 30, 2014

யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கு அதிகளவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன: வை.கே. சின்ஹா!

Tuesday, September 30, 2014
இலங்கை::யுத்தத்தின் பின்னர் இலங்கைக்கு அதிகளவான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளின் அளவும் பரப்பும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1.63 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித்திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு, உட்கட்டுமானம், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடித்துறை, கைத்தொழில் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் முக்கியம் என கருதப்பட்ட திட்டங்களுக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment