Tuesday, September 30, 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

Tuesday, September 30, 2014
இலங்கை::
ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 7ம் திகதி நடைபெறலாம் என அரசவட்டாரங்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்க்கு பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாகவே பேச்சுக்களை மேற்கொள்வார் என அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊவா தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி தற்போதைய அரசியல் சூழ்நிலையை மதிப்பிடுவார், ஊவா தேர்தலுக்கு பின்னர் அமைச்சர்களுடனும், கூட்டணிக் கட்சிகளுடனும் இடம்பெறும் முதலாவது பேச்சுக்கள் இவை என தெரிவித்துள்ள அரச வட்டாரங்கள் தேர்தல்களுக்காக ஆரம்ப வேலைகளை அரசு ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment