Tuesday, September 2, 2014

புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவார்:அரசாங்கம் நம்பிக்கை!

Tuesday, September 02, 2014
இலங்கை::புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அரச ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல,'நவநீதம்பிள்ளை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படையானது.
 
நிகழ்ந்துள்ள மாற்றத்தை அரசாங்கம் சாதகமான விதத்தில் அணுகுகிறது. அரசாங்கம் ஒருபோதும் எதிர்மறையாகச் செயற்படவில்லை. இலங்கை அரசாங்கம் எப்போதும் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை எதிர்த்தது; அவரது கருத்துக்களை நிராகரித்தது.
 
இலங்கை குறித்த அவரது சில நடவடிக்கைகள் நேர்மையற்றவை. புதிய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளை கருத்தில் எடுத்து நேர்மையான விதத்தில் செயற்படுவார் என கருதுகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment