Tuesday, September 30, 2014

பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான உள்ளுராட்சி மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில்!

Tuesday, September 30, 2014
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான உள்ளுராட்சி மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் கால்ரைட் அவர்களின் தலைமையில்(09.29.2014) நடைபெற்றது.
 
இம்மாநாட்டிற்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும், இம்மாநாட்டில் பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, மாலைதீவு, இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளின் உள்ளுராட்சி துறை சார்ந்த அமைச்சர்களும், அமைச்சுகளினது செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
 
இம்மாநாட்டின்போது பொதுநலவாய நாடுகளின் உள்ளுராட்சித்துறையின் செயலாளர் நாயகம் கால்ரைட் அவர்கள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment