Tuesday, September 30, 2014

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தஞ்சக் கோரிக்கையாளர்கள் பற்றிய மனு நிராகரிப்பு!

Tuesday, September 30, 2014
இலங்கை::இலங்கையில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடுகடத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு  உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் தஞ்சக் கோரிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படலாம் என மனித உரிமைகள் ஆர்வலர்களால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வீசா இன்றி இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களை வௌியேற்ற
 
இலங்கைக்கு உரிமையுள்ளது என அரச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை நிராகரித்துள்ளனர்

No comments:

Post a Comment