Friday, September 19, 2014

வடக்கு கிழக்கு மாகாண சபைகளை கலைத்து, அதன் அதிகாரத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: குணதாச அமரசேகர!

Friday, September 19, 2014
வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆட்சி அதிகாரத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் பிழையான தீர்மானங்களை எடுத்து பியைழான பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி நாட்டை பிளவுபடுத்தும் யோசனைத் திட்டமொன்றை எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் முன்வைக்க உள்ளதாகவும்,இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வீதியில் இறங்கிப் போராடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களின் போது அரசாங்கம் மதி நுட்பத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளை கலைத்து, அதன் அதிகாரத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment