Tuesday, September 02, 2014
திருச்சி : இலங்?கைத் தமிழர், திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி, கருமண்டபம், செல்வநகரை சேர்ந்தவர் செல்வேந்திரன், 56; இலங்கைத்
தமிழர். கடந்த, 1985ல், தமிழகம் வந்தவர், திருச்சியில், டிராவல்ஸ்
நிறுவனம் நடத்தி வந்தார்.
மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். நேற்று
முன்தினம் இரவு, 11:?? மணிக்கு, வீட்டுமுன், கத்திக்குத்து காயங்களுடன்,
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தவர், திருச்சி அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, அவர் நேற்று இறந்தார்.
திருச்சி போலீசார், விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment