Thursday, August 28, 2014

ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை ஜீ.எல். பீரிஸ் சந்தித்து கலந்துரையாடல்!

Thursday, August 28, 2014
இலங்கை::ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பிராந்தியத்தில் அவர்கள் முன்னெடுத்து வந்த வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வுக் கலந்துரையாடலொன்றை மேற்கொண் டிருந்தனர்.
 
இந்தச் சந்திப்பு இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் நெருங்கிய பொருளாதார தொடர்புகள் உள்ளமையி னால் இந்நாடுகளுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் இச்சந்திப்பின் போது கூடுதல் முக்கியத்துவமளிக்கப்பட்டது.
 
ஒவ்வொரு தூதுவர்களும் கடந்த வருடம் ஆற்றிய செயற்பாடுகள் மற்றும் அதனால் அடைந்த வளர்ச்சி ஆகியன குறித்து விளக்கமளித்த அதேவேளை இன்னும் சில மாதங்களில் குறித்த நேர வரையறைக்குள் அடையவுள்ள சாதனைகள் குறித்தும் சுட்டிக்காட்டினர். மேலும் இந்த நாடுகளில் இலங்கைக் கெதிராக மனித உரிமைகள் உள்ளிட்ட பல விவகாரங்களை அரசியல் சாதனங் களாக பயன்படுத்தி முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருக்கும் பிரசாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
 
இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார். அமைச்சர் பீரிஸ் இத்தாலியிலுள்ள இலங்கை சமூகத்தினருடனும் கலந்துரை யாடினார்.
பிரான்ஸ் தூதுவர் கருணாரத்ன ஹங்கவத்த, ஜெர்மனி தூதுவர் கருணாதி லக்க அமுனுகம, ஜெனிவாவிலுள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவிநாத பி ஆரியசின்ஹ, இத்தாலி தூதுவர் நாவலகே பேனட் குரே, பிரெவ்பெர்ட் டிற்கான இலங்கையின் கன்சியுலர் பிரதீப் ஜயவர்தன ஆகியோருடனேயே அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

No comments:

Post a Comment