Thursday, August 28, 2014

பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் தாஹிர் ராபிக் பட் இலங்கை வருகை!

Thursday, August 28, 2014
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் தாஹிர் ராபிக் பட் இலங்கை வந்தடைந்தார்.
 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நெற்றிரவு வந்தடைந்த பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி தலைமையிலான குழுவினரை இலங்கை விமானப் படையின் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க தனது பாரியார் சகிதம் வரவேற்றார்.
 
மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு விமானப் படைகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடனே இந்த விஜயம் அமைந்துள்ளதாக விமானப் படையின் பதில் ஊடகப் பேச்சாளர் வின்ங் கொமான்டர் பி. என். டி. கொஸ்தா தெரிவித்தார்.
 
இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் தளபதி இலங்கை விமானப் படையின் தளங்கள் பலவற்றிற்கும் விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை விமானப் படைத் தளபதிக்கும் பாகிஸ்தான் விமானப் படைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (28) காலை கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக் கது.

No comments:

Post a Comment