Thursday, June 5, 2014

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பதவி;க்கான உகண்டா வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும்: இலங்கை!

Thursday, June 05, 2014
இலங்கை::
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பதவி;க்கான உகண்டா வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பதவியானது வருடாந்தம் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுச் சபையின் தலைமைப் பதவிக்காக உகண்டா இம்முறை வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளது.

உகண்டாவின் சாம் குடிஸா (ளுயஅ முரவநளய) பொதுச் சபையின் தலைமைப் பதவிக்காக போட்டியிட உள்ளார்.

உகண்டாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த உறுமதி மொழியை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment