Friday, April 4, 2014

தென் கொரிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடனான பிரியாவிடை சந்திப்பு!

Friday, April 04, 2014
இலங்கை::
கொழும்பில் தனது சேவைக் காலத்தை நிறைவு செய்த இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் அதிமேதகு ஜோன் மூன்,  (ஏப் 02) பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களுடன் பிரியாவிடை சந்திப்பில் ஈடுபட்டார்.
 
இச்சந்திப்பின் போது பாதுக்காப்பு செயளாலர், அதிமேதகு ஜோன் மூன் அவர்களுடன் கலந்துரையாடினார், அவரின் அளப்பரிய சேவையை பாராட்டி நன்றி கூறியதுடன், அவருக்கு நல் வாழ்த்தும் கூறினார்.
 
தென் கொரிய தூதுவரின் சேவையை பாராட்டும் முகமாக பாதுகாப்புச் செயலாளர் அவர்களால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment