Thursday, April 24, 2014

பணம் பட்டுவாடா புகார் தேர்தல் முடிவுக்கு பின் பதில் சொல்கிறேன் ஜெயலலிதா பேட்டி!!

Thursday, April 24, 2014
சென்னை::தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ‘தேர்தல் முடிவு தெரிந்த பின்பு எனது கருத்தை சொல்கிறேன்’

என்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, இன்று காலை 9.10 மணிக்கு தனது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோருடன்

கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்றார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

கையில் மை வைத்த பின், வாக்களித்த ஜெயலலிதா வெளியே வந்ததும் அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர்.

அப்போது அவர் கூறுகையில்,  ‘தேர்தல் நேர்மையாக நடக்க தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சியினரும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். ‘இந்த

தேர்தலில் தமிழகம் முழுவதும் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளதே’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘இந்த சம்பவங்கள் குறித்து

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்’ என்றார்.

No comments:

Post a Comment