Thursday, April 24, 2014

திமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம் கருணாநிதி உறுதி!!

Thursday, April 24, 2014
சென்னை::திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரம் சாரதா மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 11 மணிக்கு

வாக்களித்தார். அவருடன் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வந்திருந்தார். வாக்களித்து விட்டு, வெளியில் வந்த கருணாநிதி, நிருபர்களுக்கு

பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:

இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிப்பது உங்களுக்கு சாதகமாக இருக்குமா?
சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் தடுத்திருக்கிறதா?
பணம் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment