Wednesday, April 02, 2014திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.17.8 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னையை சேர்ந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளின்
ஆவணங்கள் மற்றும் உடைமைகளை சுங்க அதிகாரிகள் மற்றும் இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மெட்டல் டிடெக் டர் மூலம் சோதனை செய்ததில் ஒருவரின் உடைமை யில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் அணிந்திருந்த பேன்ட்டில் 600 கிராம் தங்கத்தை 4 கட்டிகளாக பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.17.8 லட்சம். தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த சப்தர்அலி(50) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் தினமும் தங்கம் கொண்டு வந்து பயணிகள் சிக்கிவருகின்றனர்.
No comments:
Post a Comment