Wednesday, March 12, 2014
சென்னை::தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, அவர்களின் உடமைகளை பறிப்பதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு, தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிச் செல்வதாக காரணம் சொல்லப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்கள் பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், இதற்கு இரு நாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்திய & இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் தமிழகம் சார்பில் 12 மீனவ பிரதிநிதிகளும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும், இலங்கையை சேர்ந்த 10 மீனவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு, இலங்கைக்கு வருமாறு தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இலங்கை மீனவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கையிலுள்ள கொழும்பு நகரில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிறை பிடித்து சென்றனர். தற்போது இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 177 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன் அவர்களை விடுதலை செய்து சுமுக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென இந்தியாவின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதற்கு இலங்கை இதுவரை செவிசாய்க்கவில்லை. எனவே, இலங்கை கடற்படையினரின் நோக்கம் இந்த பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த விடக் கூடாது என்பதாகவே தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசோ, மத்திய அரசோ இந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. நாளை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா, தள்ளி வைக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்றும், இதை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் மீனவர்கள்தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசின் அதிகாரிகள் மத்திய வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டும்.
அதன்படி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கையிலுள்ள கொழும்பு நகரில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிறை பிடித்து சென்றனர். தற்போது இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 177 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன் அவர்களை விடுதலை செய்து சுமுக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென இந்தியாவின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதற்கு இலங்கை இதுவரை செவிசாய்க்கவில்லை. எனவே, இலங்கை கடற்படையினரின் நோக்கம் இந்த பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த விடக் கூடாது என்பதாகவே தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசோ, மத்திய அரசோ இந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. நாளை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா, தள்ளி வைக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்றும், இதை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் மீனவர்கள்தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசின் அதிகாரிகள் மத்திய வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டும்.
No comments:
Post a Comment