Friday, January 31, 2014

யுனிசெவ் நிறுவன இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஆளுநருடன் கலந்துரையாடல்!

Friday, January 31, 2014
இலங்கை::யுனிசெவ் நிறுவன இலங்கைக்ககான வதிவிட பிரதிநிதி உனமைக் கோலி வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 27 ஜனவரி 2014 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
 
யுனிசெவ் நிறுவனத்தின் செயத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் யுனிசெவ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை அதிகரிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், யுனிசெவ் நிறுவனத்தின் வட மாகாணத்திற்கான பிரதம இணைப்பாளர் திரு.பிரகாஸ் ஆகியோர் இக்கலந்துரையாடலில் உடனிருந்தார்கள்.

No comments:

Post a Comment