Friday, January 31, 2014

இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களில் தேசிய கொடியை பறக்க விடுமாறு அறிவிப்பு!

Friday, January 31, 2014
இலங்கை::இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்கள் இயங்கும் கட்டிடங்களை வர்ண கொடிகளினால் அலங்கரிக்குமாறும் அமைச்சின் செயலாளர், அரச நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
 
இலங்கையின் 66 வது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில், கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெறவுள்ளது.
தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.

No comments:

Post a Comment