Wednesday, January 1, 2014

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டு காவல் செய்தியில் உண்மை இல்லை: இராணுவத்தினரும் காவல்துறையினரும் நிராகரிப்பு!

Wednesday, January 01, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை இராணுவத்தினரும் காவல்துறையினரும் நிராகரித்துள்ளனர்.
இணையத்தளம் ஒன்று, நேற்று இரவு முதல் அவர், யாழ்;ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டது.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் ரூவான் வணிக சூரியவிடம் வினவியதற்கு, அவ்வாறான ஒரு தேவைப்பாடு தமக்கு இல்லை என்றும், இந்த செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இத தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவின் உயிர் அதிகாரிகளிடம் வினவியதற்கு, அவர்களும் இந்த செய்தியை மறுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா சிற்சபேசன் கனடாவில் குடியமர்ந்த நிலையில், அங்கு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றார்.
இந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
ராதீகா சிற்சபேசன்  புலி ஆதரவு அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவவர் .

ஆளும் கட்சியின் சார்பில் அண்மையில் தீபக் ஒபராய் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும், அதற்கு போட்டியாகவே எதிர்க்கட்சியின் சார்பில் புலி ஆதரவு ராதீகா சிற்சபேசன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment